கடந்த வாரம் நண்பர் ஒருவருடன் இந்திய அரசியல் குறித்து பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்: "தி.மு.க சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் இப்போது நிலத் தரகர் வேலை தான்.. கருணாநிதி குடும்பத்தாருக்கு நிலம் வாங்கிக் கொடுப்பது தான் முக்கிய வேலையே." அரசியல் தொடர்புடைய பலருடனும் நண்பருக்கு தொடர்பு உண்டு. அவர் கூறிய இன்னொரு செய்தி என்னை மயக்கமடையச் செய்தது: "அரசுப் பயணமாக இங்கு வந்த தமிழக அமைச்சர் ஒருவர் அண்டை நாட்டில் 600 ஏக்கர் நிலத்தை வாரிசு ஒருவருக்காக வாங்கிச் சென்றுள்ளார்". ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பார்த்தால் இதெல்லாம் ஒரு செய்தியே இல்லை என்பது போலத் தோன்றும்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான இடங்கள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் என இந்தக் குடும்பம் ஆக்டோபஸ் போல வளைத்து விட்டது. 14 தொலைக்காட்சி அலைவரிசைகள், திரைப்படத் துறையில் முழு ஆக்கிரமிப்பு, கணக்கிட முடியாத பண பலம் எனத் தமிழகத்தில் ஏறத்தாள ஏகாதிபத்தியத்தை (monopoly) நிறுவி விட்டார்கள். "நல்லது எதுவும் நடக்காவிடினும் பரவாயில்லை, அடுத்த முறை ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்து, தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும்" என்ற மனநிலை தமிழகத்தில் நிறையப் பேருக்கு வந்து விட்டது.
திரு. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' என்ற புதினத்தை (நாவல்) கடந்த வாரம் படித்தேன். ஜெயகாந்தனின் 1, 2 சிறுகதைகளை மட்டுமே, அதுவும் பல வருடங்களுக்கு முன்பு, படித்திருந்த எனக்கு இந்த புதினம் பெரிய 'வாசிப்பு அனுபவமாக' இருந்தது. எந்த திருப்பங்களும் இல்லாத, கற்பனைக்கெட்டாத விசயங்களெல்லாம் இல்லாத, ஒரு மனிதனுக்கும், அவனைச் சுற்றி உள்ளவர்களுக்குமான 2 மாத நிகழ்வுகளின் தொகுப்பாக இவ்வளவு சுவையாக எழுதி இருக்கிறார். ஒவ்வொரு இடத்தையும், கதாபாத்திரங்களின் குணாதிசியங்களையும், பல்வேறு சூழ்நிலைகளில் இந்தக் குணாதிசியங்கள் அனிச்சைச் செயலாய் எங்கனம் வெளிப்படுகிறது என்பதையும் அவர் விளக்கி எழுதி இருப்பது ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது.
கதாநாயகன் மிக்க நல்லவனாக, எல்லோரையும் மதிப்பவனாக, நெகிழ்ச்சியான அணுகுமுறை உள்ளவனாக இருப்பதற்கு 'முரண்பாடுகள் இல்லாத, மோதல்கள் இல்லாத, முணுமுணுப்புகள் இல்லாத. சண்டைகள் இல்லாத, குறைகள் இல்லாத, புகார்கள் இல்லாத, முறையீடுகள் இல்லாத, எதிர்பார்ப்புகள் இல்லாத, ஆக்கிரமிப்புக்கள் இல்லாத, அதிகாரங்கள் இல்லாத, அன்பு மட்டுமே தழைத்த' குடும்பத்தில் சுதந்திரமாக வளர்ந்ததே காரணம் என்கிறார். நுகர்வுக் கலாச்சாரத்துக்கு முந்தைய (என் வயதை ஒத்தவர்களின் பள்ளிப் பருவத்தில்), ஓரளவு நிரந்தர வருமானம் உடைய, நல்ல பெற்றோர்கள் அமைந்த, நடுத்தரக் குடும்பங்களில் வளர்ந்தவர்களில் நிறைய பேருக்கு இதில் பாதி அனுபவமேனும் கிடைத்திருக்கும்.
கதையின் இன்னொரு நாயகனை இவன் வாழ்த்துவதற்கு சொல்லும் காரணம் என்னைக் கவர்ந்தது 'வாழ்க்கையில் துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொள்கிறவர்கள் தான் ரொம்பக் குறைவு. அந்தக் குறைவானவர்களில் நீங்களும் ஒருவர்...'
இது போல பல இடங்களில் மிக எளிமையாக, சாதாரணமாக தன் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லாத நாயகன், நண்பனுக்காக குடிக்க சம்மதிக்கிறான். நண்பன் உடனே 'எனக்காக உங்கள் கொள்கையைத் தளர்த்திக் கொள்ள வேண்டாம்' என்கிறான். அதற்கு 'எனது கொள்கையே ஃபிளெக்சிபிளாக இருப்பது தான்' என்று பதிலளிக்கிறான். எவ்வளவு நல்ல செய்தி இது. இதை நாம் ஓரளவு (குடிப்பதை சொல்லவில்லை :-) ) கடைப்பிடித்தாலே போதும் - வீடோ, அலுவலகமோ எல்லா இடங்களிலும் கர்வமில்லாத சுமூகமான சூழல் நிலவும்.
வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் இந்தப் புதினத்தைப் படியுங்கள். சிங்கப்பூரில் நூலகங்களில் இது கிடைக்கும்.
சரி... தி.மு.க. வுக்கும் (திரு. மு. க.), ஜெயகாந்தனுக்கும் என்ன தொடர்பு? புதினத்தின் தலைப்பு: 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்'. கருணாநிதி அவர்களின் குடும்பச் சொத்துக்களைப் பார்க்கும் போது 'ஒரு மனிதன், ஒரு குடும்பம், தமிழ் நாடு' என்பது பொருத்தமாகிறது. :-)
Saturday, December 4, 2010
பீகார் முடிவுகள் - ஓர் அலசல்
பீகார் தேர்தல் முடிவுகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நிதீஷ் குமார் என்ற தனி மனிதரின் பணிகளுக்கு மக்கள் அளித்த சிறந்த அங்கீகாரமே இந்த பெரிய வெற்றி. ஒரு விதத்தில் இந்த அங்கீகாரத்தை அடைவது அவருக்கு சுலபமாகவே இருந்திருக்கும் - லாலுவின் அலங்கோலங்கள் தொடராமல் பார்த்துக் கொண்டிருந்தாலே மக்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். அதையும் தாண்டி ஒரு நல்லாட்சியை அளித்திருக்கிறார். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு இருந்த கடும் போட்டி (சந்திரபாபு நாயுடு) போலல்லாமல் சுலபமான எதிரிகள் தான் நிதீஷுக்கு இருந்தார்கள்.
'மதசார்பின்மை' கோஷம் எல்லாம் எடுபடவில்லை, பா.ஜ.க இங்கே நல்ல வெற்றி பெற்றுள்ளது என்று நண்பர் ஒருவர் கூறினார். நிதீஷ் குமாரே 'மதசார்பின்மை' கோஷம் எழுப்புவதில் முதன்மையானவர் தான். இது நிதீஷுக்கு கிடைத்த வெற்றி - கூட்டணியாக இருந்த பா.ஜ.க-வும் நல்ல பயனைப் பெற்றது என்று நான் கூறினேன். என்று பா.ஜ.க 'இந்துத்துவா' கோஷத்தை கையில் எடுத்ததோ அன்றில் இருந்து தான் 'மதசார்பின்மை' கோஷமும் வலுப்பெற்றது. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதும், மக்களுக்கு இவர்களின் 'இந்துத்துவா' கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்ததும், 'வளர்ச்சி' கோஷத்தை அது முழங்க ஆரம்பித்தது. மொழியை வைத்து தி.மு.க. செய்த அரசியலை விட மதத்தை வைத்து பா.ஜ.க. செய்த அரசியல் ஆபத்தானது. எப்படியோ 'இந்துத்துவா' வை கைவிட்டு விட்டது போல காட்டிக் கொள்வது உண்மையாய் இருக்குமெனில் அது ஒரு நல்ல செய்தியே.
உண்மையிலேயே பீகாரில் பா.ஜ.க.-வுக்கு இவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்குமானால், 'மோடியோ, வருண்காந்தியோ இங்கே பிரச்சாரத்துக்கு கண்டிப்பாக வரக் கூடாது' என்ற நிதீஷின் கட்டளையை புறந்தள்ளி இருப்பார்கள். அவர் என்ன சொன்னாலும் சரியென்று ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் தான் பா.ஜ.க. இருந்தது.
காங்கிரசின் படுதோல்வியும் நல்ல செய்தியே. பீகார் மக்களிடம் இருந்து கட்சி எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல மாநிலங்களிலும் இதே நிலைமை தான். ராகுலின் 'மேஜிக்' எடுபடவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். நல்லாட்சி தந்த முதல்வருக்கெதிராக சரியான மாற்றாக முன்னிறுத்த ஒரு தலைவர் இல்லாத நிலைமையில், லாலு - பாஸ்வானுடன் கூட்டணி வைத்து 10 - 15 இடங்களைப் பெறுவதை விட தனியாகவே நிற்கலாம் என்ற ராகுலின் முடிவு பாராட்டப் பட வேண்டிய ஒன்றே. தொடர்ந்து இரு முறை தனியாக நின்று தான் உ.பி.-யில் ஓரளவு மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் பெற முடிந்தது. அதே அளவு முயற்சிகளை ராகுலும் காங்கிரசும் இங்கும் தொடர்ந்து செய்ய வேண்டும். மிகுந்த நம்பிக்கை வைத்து நீண்ட காலம் ஆதரித்த கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவே இந்த வீழ்ச்சி.
மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ என்ன அரசியல் செய்தாலும், நல்லாட்சி கொடுத்த ஒருவர் முன்னால் அது செல்லாது இனிமேல் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நிதீஷ் குமார் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாமல் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும் - வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
'மதசார்பின்மை' கோஷம் எல்லாம் எடுபடவில்லை, பா.ஜ.க இங்கே நல்ல வெற்றி பெற்றுள்ளது என்று நண்பர் ஒருவர் கூறினார். நிதீஷ் குமாரே 'மதசார்பின்மை' கோஷம் எழுப்புவதில் முதன்மையானவர் தான். இது நிதீஷுக்கு கிடைத்த வெற்றி - கூட்டணியாக இருந்த பா.ஜ.க-வும் நல்ல பயனைப் பெற்றது என்று நான் கூறினேன். என்று பா.ஜ.க 'இந்துத்துவா' கோஷத்தை கையில் எடுத்ததோ அன்றில் இருந்து தான் 'மதசார்பின்மை' கோஷமும் வலுப்பெற்றது. குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதும், மக்களுக்கு இவர்களின் 'இந்துத்துவா' கோஷத்தின் மீதான கவர்ச்சி குறைந்ததும், 'வளர்ச்சி' கோஷத்தை அது முழங்க ஆரம்பித்தது. மொழியை வைத்து தி.மு.க. செய்த அரசியலை விட மதத்தை வைத்து பா.ஜ.க. செய்த அரசியல் ஆபத்தானது. எப்படியோ 'இந்துத்துவா' வை கைவிட்டு விட்டது போல காட்டிக் கொள்வது உண்மையாய் இருக்குமெனில் அது ஒரு நல்ல செய்தியே.
உண்மையிலேயே பீகாரில் பா.ஜ.க.-வுக்கு இவ்வளவு பெரிய செல்வாக்கு இருக்குமானால், 'மோடியோ, வருண்காந்தியோ இங்கே பிரச்சாரத்துக்கு கண்டிப்பாக வரக் கூடாது' என்ற நிதீஷின் கட்டளையை புறந்தள்ளி இருப்பார்கள். அவர் என்ன சொன்னாலும் சரியென்று ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையில் தான் பா.ஜ.க. இருந்தது.
காங்கிரசின் படுதோல்வியும் நல்ல செய்தியே. பீகார் மக்களிடம் இருந்து கட்சி எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. பல மாநிலங்களிலும் இதே நிலைமை தான். ராகுலின் 'மேஜிக்' எடுபடவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். நல்லாட்சி தந்த முதல்வருக்கெதிராக சரியான மாற்றாக முன்னிறுத்த ஒரு தலைவர் இல்லாத நிலைமையில், லாலு - பாஸ்வானுடன் கூட்டணி வைத்து 10 - 15 இடங்களைப் பெறுவதை விட தனியாகவே நிற்கலாம் என்ற ராகுலின் முடிவு பாராட்டப் பட வேண்டிய ஒன்றே. தொடர்ந்து இரு முறை தனியாக நின்று தான் உ.பி.-யில் ஓரளவு மக்கள் நம்பிக்கையை காங்கிரஸ் பெற முடிந்தது. அதே அளவு முயற்சிகளை ராகுலும் காங்கிரசும் இங்கும் தொடர்ந்து செய்ய வேண்டும். மிகுந்த நம்பிக்கை வைத்து நீண்ட காலம் ஆதரித்த கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவே இந்த வீழ்ச்சி.
மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ என்ன அரசியல் செய்தாலும், நல்லாட்சி கொடுத்த ஒருவர் முன்னால் அது செல்லாது இனிமேல் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது. நிதீஷ் குமார் மக்களின் நம்பிக்கையை ஏமாற்றாமல் தொடர்ந்து நல்லாட்சி வழங்க வேண்டும் - வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Sunday, October 24, 2010
காமன்வெல்த் போட்டியும் அயோத்தி தீர்ப்பும்
உலக நாடுகளில் பல, இந்தியா எப்படியும் திணறி தலைகுனிய போகிறது என ஆர்வத்துடன் எதிர்பார்த்த இரு முக்கிய நிகழ்வுகளிலும் இந்தியா & இந்தியர்களின் சிறப்பான செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
முதலில் காமன்வெல்த் போட்டி:
காமன்வெல்த் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என இந்தியா முயன்றது ஏன்? என்பதே எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் எதைச் சாதிக்க, எதை உலகுக்கு சொல்ல அல்லது யாருக்கு போட்டியாக நமது திறமையைக் காட்ட நினைத்தோமோ தெரியவில்லை.
ஒரு சர்வதேச போட்டியை சிறப்பாக நடத்தும் திறமையும், திட்டமிட்ட செயல்பாடும் உடையவர்கள் நாங்கள் என உலகுக்கு காட்டுவது தான்
உண்மையிலேயே நமது நோக்கம் என்றால் ஆரம்பகால சொதப்பல்கள் எல்லாமே அதற்கு எதிராகவே அமைந்தன.
விளையாட்டு துறை அமைச்சர் திரு. கில் சர்வசாதாரணமாக 'கடைசி இரு வாரங்களில் எல்லாமே சரி செய்து விடுவோம். கடைசி நிமிடங்களில் எல்லா வேலைகளையும் செய்யும் இந்திய இல்லத் திருமணங்களைப் போலத் தான் இதுவும்' என்று கூறினார். ஓரளவுக்கு இது உண்மையும் கூட.
கடைசி நிமிடத்தில் ஏதாவது செய்து ஒப்பேற்றி விடுவோம் என்பது நமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (இது கூட தவறு தான்). ஆனால் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும், பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வில் இப்படி இருந்தது எந்த விதத்திலும் இந்தியாவிற்கு சிறப்பில்லை.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் பல நாடுகளுக்கு இந்த குளறுபடிகளெல்லாம் பெரும் வசதியாய் அமைந்தன. சில நாட்டு ஊடகங்கள் சீனாவின் ஒலிம்பிக் சிறப்பை ஒப்பீடு செய்து நம்மை விமர்சித்தன. தீவிரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், தொடர்மழையும் அதன் விளைவான தொற்றுநோய் அபாயமும், அயோத்தி தீர்ப்பும் அதன் விளைவான கலவர பயமும் என சீனாவுக்கு இல்லாத எத்தனையோ 'சனநாயக நாட்டிற்கான' பிரச்னைகளும் இந்தியாவுக்கு இருந்தன. ஆனால், கடைசி இரு வாரங்களில் அனைத்தையும் சரிசெய்து, துவக்க நிகழ்ச்சி முதல் நிறைவு விழா வரை சர்வதேசத் தரத்துடன் நடத்திக் காட்டி எல்லோரையும் வாயடைக்கச் செய்து விட்டோம்.
விமர்சனம் செய்த அளவுக்கு, சிறப்பாக நடத்திக் காட்டிய திறமையைப் பாராட்ட ஏனோ சர்வதேச ஊடகங்களுக்கு மனமில்லை. விளையாட்டு நகரத்தில் பாலம் ஒன்று உடைந்ததை மிகப்பெரிய அளவில் விமர்சித்து பூதாகரமாக்கியவர்களுக்கு, ஐந்தே நாட்களில் நமது ராணுவம் அதை சரிசெய்ததைப் பாராட்டத் தோணவில்லை.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இந்த ஊடகங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டு 'நம்ம இந்தியா இப்படித் தான்' என்று இளக்காரமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின் ஊடகங்களின் நம்பகத்தன்மை, நடுநிலைமை எல்லாமே கேள்விக்குரியவை ஆகிவிட்டன. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
எப்படியோ காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடந்து முடிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையே. ஊழல் பிரச்னைகளெல்லாம் நம் உள்நாட்டுப் பிரச்னைகள் :-)
அயோத்தி தீர்ப்பு:
காமன்வெல்த் போட்டி நெருங்கும் வேளையில் அயோத்தி தீர்ப்பும் வெளிவர அதனுடைய எதிரொலி எப்படி இருக்குமோ என எல்லோருக்குமே மிகப்பெரிய கவலை இருந்தது. தீர்ப்பு தங்களுக்கு எதிரானது என எண்ணி ஏதாவது ஒரு சாரார் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இந்தியர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தொடர்வதில் எந்த விருப்பமும் இல்லை என்பதையே தீர்ப்பின் பிந்தைய நாட்கள் உணர்த்தியது.
நீதிமன்றங்களுக்கும் அவைகளின் தீர்ப்புக்கும் இந்தியர்கள் தரும் மரியாதையும் மீண்டும் நிரூபணமாகியது. இதே தீர்வை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சொல்லி இருந்தால், ஒருவேளை இது அரசியலாக்கப் பட்டிருக்கலாம்.
எப்படியோ சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னைக்கான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பும் அமைதி காத்தது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!
இருப்பினும் திரு. சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டி இருந்த திரு. மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது
முதலில் காமன்வெல்த் போட்டி:
காமன்வெல்த் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என இந்தியா முயன்றது ஏன்? என்பதே எனக்கு சரியாக விளங்கவில்லை. இதன் மூலம் எதைச் சாதிக்க, எதை உலகுக்கு சொல்ல அல்லது யாருக்கு போட்டியாக நமது திறமையைக் காட்ட நினைத்தோமோ தெரியவில்லை.
ஒரு சர்வதேச போட்டியை சிறப்பாக நடத்தும் திறமையும், திட்டமிட்ட செயல்பாடும் உடையவர்கள் நாங்கள் என உலகுக்கு காட்டுவது தான்
உண்மையிலேயே நமது நோக்கம் என்றால் ஆரம்பகால சொதப்பல்கள் எல்லாமே அதற்கு எதிராகவே அமைந்தன.
விளையாட்டு துறை அமைச்சர் திரு. கில் சர்வசாதாரணமாக 'கடைசி இரு வாரங்களில் எல்லாமே சரி செய்து விடுவோம். கடைசி நிமிடங்களில் எல்லா வேலைகளையும் செய்யும் இந்திய இல்லத் திருமணங்களைப் போலத் தான் இதுவும்' என்று கூறினார். ஓரளவுக்கு இது உண்மையும் கூட.
கடைசி நிமிடத்தில் ஏதாவது செய்து ஒப்பேற்றி விடுவோம் என்பது நமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் (இது கூட தவறு தான்). ஆனால் உலகமே கவனித்துக் கொண்டிருக்கும், பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு முக்கிய நிகழ்வில் இப்படி இருந்தது எந்த விதத்திலும் இந்தியாவிற்கு சிறப்பில்லை.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் பல நாடுகளுக்கு இந்த குளறுபடிகளெல்லாம் பெரும் வசதியாய் அமைந்தன. சில நாட்டு ஊடகங்கள் சீனாவின் ஒலிம்பிக் சிறப்பை ஒப்பீடு செய்து நம்மை விமர்சித்தன. தீவிரவாதத் தாக்குதல்கள், பாதுகாப்பு பிரச்னைகள், தொடர்மழையும் அதன் விளைவான தொற்றுநோய் அபாயமும், அயோத்தி தீர்ப்பும் அதன் விளைவான கலவர பயமும் என சீனாவுக்கு இல்லாத எத்தனையோ 'சனநாயக நாட்டிற்கான' பிரச்னைகளும் இந்தியாவுக்கு இருந்தன. ஆனால், கடைசி இரு வாரங்களில் அனைத்தையும் சரிசெய்து, துவக்க நிகழ்ச்சி முதல் நிறைவு விழா வரை சர்வதேசத் தரத்துடன் நடத்திக் காட்டி எல்லோரையும் வாயடைக்கச் செய்து விட்டோம்.
விமர்சனம் செய்த அளவுக்கு, சிறப்பாக நடத்திக் காட்டிய திறமையைப் பாராட்ட ஏனோ சர்வதேச ஊடகங்களுக்கு மனமில்லை. விளையாட்டு நகரத்தில் பாலம் ஒன்று உடைந்ததை மிகப்பெரிய அளவில் விமர்சித்து பூதாகரமாக்கியவர்களுக்கு, ஐந்தே நாட்களில் நமது ராணுவம் அதை சரிசெய்ததைப் பாராட்டத் தோணவில்லை.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் இந்த ஊடகங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்டு 'நம்ம இந்தியா இப்படித் தான்' என்று இளக்காரமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். உலகமயமாக்கலுக்குப் பின் ஊடகங்களின் நம்பகத்தன்மை, நடுநிலைமை எல்லாமே கேள்விக்குரியவை ஆகிவிட்டன. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
எப்படியோ காமன்வெல்த் போட்டி சிறப்பாக நடந்து முடிந்திருப்பது நமக்கெல்லாம் பெருமையே. ஊழல் பிரச்னைகளெல்லாம் நம் உள்நாட்டுப் பிரச்னைகள் :-)
அயோத்தி தீர்ப்பு:
காமன்வெல்த் போட்டி நெருங்கும் வேளையில் அயோத்தி தீர்ப்பும் வெளிவர அதனுடைய எதிரொலி எப்படி இருக்குமோ என எல்லோருக்குமே மிகப்பெரிய கவலை இருந்தது. தீர்ப்பு தங்களுக்கு எதிரானது என எண்ணி ஏதாவது ஒரு சாரார் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்ற பயம் இருந்தது. ஆனால் இந்தியர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் தொடர்வதில் எந்த விருப்பமும் இல்லை என்பதையே தீர்ப்பின் பிந்தைய நாட்கள் உணர்த்தியது.
நீதிமன்றங்களுக்கும் அவைகளின் தீர்ப்புக்கும் இந்தியர்கள் தரும் மரியாதையும் மீண்டும் நிரூபணமாகியது. இதே தீர்வை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ சொல்லி இருந்தால், ஒருவேளை இது அரசியலாக்கப் பட்டிருக்கலாம்.
எப்படியோ சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னைக்கான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இரு தரப்பும் அமைதி காத்தது நமக்கெல்லாம் மகிழ்ச்சியே!
இருப்பினும் திரு. சுஜாதா தனது கட்டுரை ஒன்றில் மேற்கோள் காட்டி இருந்த திரு. மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது
பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
சனங்களுக்கு வேண்டும் சுகாதாரமான
கழிப்பறைகளேனும்..
ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்றும் பொருந்துவது வருத்தத்திற்குரியது.
Sunday, October 17, 2010
தமிழகத்திற்கு குவியும் பாராட்டுகள்!
''கல்வி, மின்சாரம் போன்றவற்றில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டியவை ஆகும்''
- குடியரசுத் தலைவர்
''அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும் பணிகளிலும் ஊழல் வெகுவாகக் குறைந்து, திறமை அதிகமாகக் காணப்படும் ஒரே மாநிலம் தமிழகமே!'
- பிரதமர்
''விவசாயிகளுக்கு கடன் வழங்குவதிலும், கூட்டுறவுத் துறை வளர்ச்சியிலும் முன்னணியில் இருப்பது தமிழகமே!'
- மத்திய அமைச்சர்
''முற்போக்கு அரசியலிலும், நிலையான ஆட்சியிலும், நிர்வாகத் திறமையிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது'
- மத்திய உணவு அமைச்சர்
''சிகப்பு நாடா என்ற தாமதத் தன்மை என்னும் தீராத நோயைத் தீர்த்துக் கட்ட முழுமூச்சுடன் முயன்று முன்னேறி வருகிறது தமிழகம். அதை பிற மாநிலங்களும் அவசியம் பின்பற்ற வேண்டும்''
- தேசியத் தலைவர்
''உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது. இது என்றுமில்லாத சாதனை.'
- மத்திய அமைச்சர்
''சமுதாய நலத்திட்டங்களுக்கான மத்திய அரசின் மானியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்''
- மத்திய திட்டக்குழு தலைவர்
என்ன? படிக்க படிக்க ''கண்ண கட்டுதா'' உங்களுக்கு? அவ்வளவு நல்ல ஆட்சியா நடக்குது இங்கே? என்று கேட்க தோணுகிறதா?
இந்தப் பாராட்டுக்களெல்லாம் மக்கள் தலைவர் காமராசர் தமிழக முதல்வராய் இருந்த போது திரு. ராஜேந்திர பிரசாத், பண்டித நேரு, மொரார்ஜி தேசாய், ஏ.எம்.தாமஸ், பண்டித பந்த், எம்.வி.கிருஷ்ணப்பா, குல்சாரிலால் நந்தா போன்ற தலைவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள்.
என்னை மிகவும் கவர்ந்த பெரும் தலைவர் காமராசரைப் பற்றிய பதிவுடன் எனது தளத்தைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு சிறப்பான ஆட்சியுடன் துவங்கிய நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை என்னும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.
அண்மையில் காமராசரைப் பற்றிய ஒரு புத்தகத்தை நூலகத்தில் படித்தேன் (மக்கள் தலைவர் காமராசர், தொகுப்பு - சுந்திர புத்தன், வெளியீடு - தோழைமை வெளியீடு) அதில் கிடைத்த தகவல்கள் தான் மேலே சொன்னவை. எனது நெருங்கிய நண்பன் அடிக்கடி கூறுவான் ''காமராசரைப் பற்றியெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமலே போய் விடுமோ?'' தலைவரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரியப்படுத்தும் முயற்சியை நான் தொடர்ந்து செய்வேன்.
பெரியாரும், காமராசரும் கனவில் வருகிறார்கள், காமராசரின் ஆட்சி தான் இங்கே நடக்கிறது, காமராசரின் ஆட்சி சிறந்த ஆட்சி என்றெல்லாம் இன்று கூறிக் கொள்ளும் திரு. கருணாநிதி, தானும் தன்னுடைய கட்சியும் காமராசருக்கு எதிராக அன்று செய்த அநாகரீகமான அவதூறு விமர்சனங்களுக்கெல்லாம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? தமிழக அரசியலின் மூத்த தலைவரிடம் இருந்து இந்த குறைந்தபட்ச அரசியல் நாகரீகத்தை, நேர்மையை எதிர்பார்க்கலாமா?
- குடியரசுத் தலைவர்
''அன்றாட அரசாங்க நிர்வாகத்திலும், திட்டங்கள் போன்ற பெரும் பணிகளிலும் ஊழல் வெகுவாகக் குறைந்து, திறமை அதிகமாகக் காணப்படும் ஒரே மாநிலம் தமிழகமே!'
- பிரதமர்
''விவசாயிகளுக்கு கடன் வழங்குவதிலும், கூட்டுறவுத் துறை வளர்ச்சியிலும் முன்னணியில் இருப்பது தமிழகமே!'
- மத்திய அமைச்சர்
''முற்போக்கு அரசியலிலும், நிலையான ஆட்சியிலும், நிர்வாகத் திறமையிலும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது'
- மத்திய உணவு அமைச்சர்
''சிகப்பு நாடா என்ற தாமதத் தன்மை என்னும் தீராத நோயைத் தீர்த்துக் கட்ட முழுமூச்சுடன் முயன்று முன்னேறி வருகிறது தமிழகம். அதை பிற மாநிலங்களும் அவசியம் பின்பற்ற வேண்டும்''
- தேசியத் தலைவர்
''உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுவிட்டது. இது என்றுமில்லாத சாதனை.'
- மத்திய அமைச்சர்
''சமுதாய நலத்திட்டங்களுக்கான மத்திய அரசின் மானியங்களை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான்''
- மத்திய திட்டக்குழு தலைவர்
என்ன? படிக்க படிக்க ''கண்ண கட்டுதா'' உங்களுக்கு? அவ்வளவு நல்ல ஆட்சியா நடக்குது இங்கே? என்று கேட்க தோணுகிறதா?
இந்தப் பாராட்டுக்களெல்லாம் மக்கள் தலைவர் காமராசர் தமிழக முதல்வராய் இருந்த போது திரு. ராஜேந்திர பிரசாத், பண்டித நேரு, மொரார்ஜி தேசாய், ஏ.எம்.தாமஸ், பண்டித பந்த், எம்.வி.கிருஷ்ணப்பா, குல்சாரிலால் நந்தா போன்ற தலைவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்கள்.
என்னை மிகவும் கவர்ந்த பெரும் தலைவர் காமராசரைப் பற்றிய பதிவுடன் எனது தளத்தைத் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதே சமயம் சுதந்திரத்திற்கு பிறகு இவ்வளவு சிறப்பான ஆட்சியுடன் துவங்கிய நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை என்னும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.
அண்மையில் காமராசரைப் பற்றிய ஒரு புத்தகத்தை நூலகத்தில் படித்தேன் (மக்கள் தலைவர் காமராசர், தொகுப்பு - சுந்திர புத்தன், வெளியீடு - தோழைமை வெளியீடு) அதில் கிடைத்த தகவல்கள் தான் மேலே சொன்னவை. எனது நெருங்கிய நண்பன் அடிக்கடி கூறுவான் ''காமராசரைப் பற்றியெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமலே போய் விடுமோ?'' தலைவரைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரியப்படுத்தும் முயற்சியை நான் தொடர்ந்து செய்வேன்.
பெரியாரும், காமராசரும் கனவில் வருகிறார்கள், காமராசரின் ஆட்சி தான் இங்கே நடக்கிறது, காமராசரின் ஆட்சி சிறந்த ஆட்சி என்றெல்லாம் இன்று கூறிக் கொள்ளும் திரு. கருணாநிதி, தானும் தன்னுடைய கட்சியும் காமராசருக்கு எதிராக அன்று செய்த அநாகரீகமான அவதூறு விமர்சனங்களுக்கெல்லாம் பகிரங்க மன்னிப்பு கேட்பாரா? தமிழக அரசியலின் மூத்த தலைவரிடம் இருந்து இந்த குறைந்தபட்ச அரசியல் நாகரீகத்தை, நேர்மையை எதிர்பார்க்கலாமா?
Subscribe to:
Comments (Atom)